கீறல்!

கீறல்!


ஒரு வாக்குறுதியை 
மீறுதலென்பது
எவ்வளவு வன்மமானது
வன்மையானது
தாத்பரியம் விளங்காத
தான்தோன்றி மனிதர்கள்
சட்டென முகத்தை
ஒருவர் பக்கத்திலிருந்து
இன்னொரு பக்கம்
திருப்பிக் கொள்தல் என்பது
எவ்வளவு மோசமானது
மனசாட்சிக்கு விலங்கிடும்
மாய மனிதர்கள்
சாட்டையடிகளாய்
உங்கள் சதிகள்
அன்பின் கைகளைத்
திடீரென உதறிவிடுதலென்பது
எவ்வளவு கொடூரமானது
பாலில் விஷத்தைக்
கலப்பது போல
மனங்களின் மரணங்களைக்
கொண்டு வரும்
திசை மாறும் முடிவுகள்
துரோகங்களின் அரியாசனங்கள்
உறவொன்றினைக் கத்தரித்து
விடுதலென்பது
எவ்வளவு கீழ்த்தரமான விடயம்
உதாசீனப்படுத்தலை
முகத்திரையாக்கும்
மூட மானிடர்கள்
காயத்திலே கீறல்களாய்
ரணங்கள்
ஒரு விடயத்தைத்
திரித்துக் கூறுதல் என்பது
எவ்வளவு கேவலமானது
மெல்லிய உள்ளத்தைக்
கூறுபோட்டு விற்கும்
இரண்டகம்
விரோதத்தை வளர்க்கும்
வீணான வாதங்கள் போல

ஒரு நாளில் ஒரு மனிதன்
உன்னுடன்
எப்படி ஆழ்ந்த புரிதலில்
இருந்தானோ....
அதே புரிதலை
பிறிதொரு நாளில்
எதிர்பார்க்க வேண்டாம்...
ஏனனில்... மனிதன்
இறைவனுக்கே நன்றி 
கெட்டவனாக இருக்கிறான்!!!

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post