காற்றில் மிதந்தபடி
தட்டுத் தடுமாறி
நடக்கலானேன்
வந்தவழியே திரும்பி
நிலவில் இறங்கிய
விண்வெளி ஓடத்திலேறி
அமர்ந்தேன்...
தொடர்ந்த உடலசைவு
சட்டென கண்விழித்து
காண்கையில் ...
அயர்ந்துறங்கும் அப்பாவின்
நெஞ்சினில் தலைசாய்ந்தபடி
கிடக்கிறேன்
கனவென உணர்ந்து.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை