இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

 
டாக்காவில் இடம்பெற்ற வங்காளதேசிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், அஞ்சலோ மத்யூஸ் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர்.

போட்டி முடிந்ததும் பேசிய இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணரத்ன, இலங்கை மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க விரும்புகிறேன். கடினமான சூழலில் இருக்கும் எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது, அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும்' எனத் தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரத்ன இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரண்டு அரைச்சதம் உட்பட 148 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

Previous Post Next Post