ஒருவர்...
என்னை ஏமாற்றிய நபரை
நல்லவரென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எனக்குத் தெரியாத நபரை
சரியில்லையென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எனக்குத் தெரியாதவரை
தெரியவரும் காலத்தில்
நல்லவரென்றும்
சரியில்லையென்றும்
நான் சொல்வதைப்போல்,
எனக்குத் தெரிந்த நல்லவரை
அவருக்குத்
தெரியவரும் காலத்தில்
நல்லவரென்றும்
சரியில்லையென்றும்
இரண்டில் ஒன்றைத்தான்
அவரும்
சொல்லப்போகிறார்.
E-mail; vettai007@yahoo.com
Tags:
கவிதை