மழைத்துளியாய் மட்டும்
நானாகிவிடுகிறேன்....
இடையோரமாக
ஒரு சொட்டு
விரலால் மட்டும் தட்டிவிடாதே
பருக எண்ணி இதழோடு
பதித்துவிடாதே......
தலையுதறில்
தவறி விழுகின்றேன்
சிக்கில்லாத கூந்தல்
மொழியாய் உளறலாய்
சொட்டி விடுகிறேன்
இதழோரம்........
வளையலில் ஒரு சொட்டு
வகிடில் மறு சொட்டு
"ப" கழுத்தில் பத்து சொட்டென
உன்- அலற குளியலில்
பலநூறாகி போகிறேன்....
மழையாகலாம் வா
மற்றவையெல்லாம்
சொட்டுகளாய்
சாரலாய்
உச்சி முதல் பாதமாய்
மாறிப்போகட்டும்...
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை