கிளிக்குத் தாகம் எடுத்ததாம்
தென்னை மரத்தில் அமர்ந்ததாம்
இளநி தன்னைப் பார்த்ததாம்
அலகால் கொத்தி எடுத்ததாம்
கொத்திக் கொத்தித் துளையிட்டே
இளநி தன்னைத் தலைகீழாய்ப்
பிடித்தே வாயில் வைத்தேதான்
இளநீர் தன்னைக் குடிக்கிறதே!
பார்க்கப் பார்க்க அழகுதான்!
கிளிக்கும் இளநீர் சுவைதானே!
தேவை என்றால் முயற்சிவரும்
முயற்சி திருவினை ஆகிடுமே!
முயன்றால் வாழ்வில் வெற்றியுண்டு!
முயன்றே நாமும் வாழ்ந்திடுவோம்!
ettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை