காலங்கள் காற்றாய் கடந்தாலும் நாம் இழந்த ,எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளின் வடுக்கள்..
அன்று தந்த வேதனையின் வலியையே இன்றும் தருகிறது..
உள்ளம் கனக்கிறது.
எம் ஆருயிர் அன்னை எம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
தரணியிலே ஒவ்வொரு நொடியும் வேதனையை தரக்கூடிய ஒரு பிரிவு தாயின் இழப்பாகும்.
இறைவனின் திருப்பொருத்தத்தையும், இரசூல் நபியினதும் ஆஷிக்கின் களினதும், அகம் குளிர வைக்கும் இறைநேசர்களினதும் அருகாமையையும் மஹப்பத்தையும் பெற்றவர்களாக சுவனத்தில் என் தாய் ஜொலிக்க நீங்களும் பிரார்த்தியுங்கள்...
தாயை இழந்த நொடியிலிருந்து நான் உணர்கிறேன் தாயுடன் இருப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று. தாய்மையை போற்றுங்கள்...
தாயை காதலியுங்கள்.
பெற்றோரைப் போல் தரணியிலே உங்களை தாங்குவோர் யாருமில்லை...
என் அன்பு அன்னையின் நினைவுகள் என்னில் ஒவ்வொரு நொடியும் வந்து என்னை வாழ வைக்கின்றது.
என்னுள் அவர்கள் வாழ்கின்றார்கள்...
Galhinna