உலக திருக்குறள் கூட்டமைப்பின் பேரூர் கல்வி மாவட்ட லாலி ரோடு மகளிர் அணி கிளைத் துவக்க விழா!

உலக திருக்குறள் கூட்டமைப்பின் பேரூர் கல்வி மாவட்ட லாலி ரோடு மகளிர் அணி கிளைத் துவக்க விழா!


தமிழ்நாடு மேற்குமண்டலம் கோவை வருவாய் மாவட்டம் பேரூர் கல்வி மாவட்டத்தில் மகளிர் அணி துவக்க விழா சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோவை லாலி ரோடு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

திருக்குறள் தூதர் குறள்யோகி முனைவர் மு. க. அன்வர் பாட்ஷா அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்தமிழ் தாய் வாழ்த்து திருக்குறள் வாழ்த்துக்குப் பிறகு திருமதி  லலிதாம்பிகை ராஜசேகர் வரவேற்புரையாற்றகோவை லாலி ரோடு  மகளிர் அணி கிளை அமைப்பைச சேர்ந்த பொறுப்பாளர்களை வரவேற்று கூட்டமைப்பின் கோவை ,நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளர் கவியகம் மணிவண்ணன்  அறிமுக உரை நிகழ்த்தினார்.


உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கோவை நீலகிரி மண்டலப் பொறுப்பாளருமான   குறள்யோகி முனைவர் மு. க  அன்வர் பாட்ஷா அவர்கள் தனது தலைமை உரையில்  மகளிர் அணி பொறுப்பாளர்களின் பணிகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டு  விரிவான உரையாற்றினார் .

முன்னதாக உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் குறட்செல்வர் ஆதிலிங்கம் அவர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் முன்னிலையில் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக உலகத் திருக்குறள் கூட்டமைப்பின்கோவை கல்வி மாவட்டத் தலைவர் கலைமாமணி மு.பெ.இராமலிங்கம் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

கோவை வருவாய் மாவட்டம் பேரூர் கல்வி மாவட்ட மகளிர் அணி லாலி ரோடு கிளையின்  தலைவராகத் திருமதி. லலிதாம்பிகை ராஜசேகர் அவர்களும், செயலாளராகத் திருமதி. கீதா ஜெகதீஷ் அவர்களும், பொருளாளராகத் திருமதி. சுப்புலட்சுமி ரவிக்குமார் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

துணைத் தலைவர்களாக, செல்வி.சி.பி.சுதந்திர  நாச்சினி, திருமதி. ஜாக்குலின் மேரி நாகராஜ் மற்றும் துணைச் செயலாளராக திருமதி ருக்மணி முத்து, திருமதி உமா மகேசுவரி கமலக்கண்ணன் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினர்.

விழாவின் நிறைவாக திருமதி கீதா ஜெகதீஷ் நன்றியுரை வழங்க மேற்படி பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் துவக்க விழா நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.ம. சம்யுக்தா,இரா.சிவசங்கரி, இரா.சாய்கீர்த்தி,சா.சாதனா மற்றும் மா.சா. குரு கிருத்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேட்டை நிருபர் 
தமிழ்நாடு 

Post a Comment

Previous Post Next Post