உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக முஹம்மது நபி(ஸல் )அவர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக குவைத்,கத்தார் ,ஈரான் நாடுகள் இந்தியா தூதர்களை அழைத்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்தியா அரசாங்கம் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இப்படிப்பட்ட இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்றும் வலியுதியுள்ளன.
இப்படிப்பட்ட செயல்களால் இந்தியாவில் ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினைஉண்டாகும் நிலை உருவாகும் என்றும் அரபு நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இந்தியா