கண்ணாலே கண்ணி வச்சுப் போறாளே!

கண்ணாலே கண்ணி வச்சுப் போறாளே!


கண்ணாலே கண்ணி வச்சுப் போனாளே 
தன்னாலே எனது நெஞ்சம் சிக்கியதே 
அவ பின்னாலே என் மூச்சும் ஓடியதே 
மண் மேலே நடந்த பாதம்  
விண் மேலே பறப்பதாக தோன்றியதே

எண்ணத்தில் தூண்டில் இட்டாள் 
உள்ளத்திலே மெல்ல வலை விரித்து 
அதிலே அவள் முகத்தையும் 
முடிச்சு போட்டு விட்டாள் 
கன்னமது மதுக்கிண்ணமோ  ?
இன்னும் போதை 
தெளியவில்லை என்னுள்ளே 

சின்ன சிரிப்பால் சிறை பிடித்தாள் 
சிக்குண்டு துடிக்கிறது என் மனசு 
என்ன அதிசயமோ அவள் 
கஞ்சாத் தோட்டத்து வஞ்சியோ  ?
ஒற்றைப் பார்வையிலே 
கொஞ்சம் கொஞ்சமாய் போதை எற்றி 
தஞ்சம் இனிமேல் அவளது மஞ்சம் 
என்று இன்றே நான் உறுதிமொழி 
எடுக்கவே  வைத்து விட்டாள் 

செங்கறையான்  புகுந்திடாத 
கட்டெறும்பு ஊர்ந்து விடாத
காட்டு யானை சுவைத்திடாத 
கட்டுக் கலையாத கட்டுடலழகி 
என் முன்னே அன்ன நடை போட்டு 
எனது இதயம் நுழைந்து விட்டாள் 

மின்னல் இடியோடு பிறக்கும் வேளை 
காந்தக் கண்ணால் பார்த்து விட்டாள் 
துருப் பிடித்த என் வேல் விழி 
ஒட்டிக் கொண்டது  
கன்னியின் கண்ணி வச்ச 
விழியிலே  தங்கிக் கொண்டது 

கலா





Post a Comment

Previous Post Next Post