'உத்துர கிணி கனி '' நூல் வெளியீட்டு விழா- 2022

'உத்துர கிணி கனி '' நூல் வெளியீட்டு விழா- 2022


சிங்கள இலக்கிய மன்றம், இலங்கை வங்கி ஏற்பாடு செய்த  இலங்கை வங்கியின் மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திர பதிரண தமிழ்  மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்த அரசியல் நாவலான ''உத்துர கிணி கனி '' நூல் வெளியீட்டு விழா2022 நவம்பர் 09ஆம் திகதி, புதன்கிழமை பி.ப 12.30 மணிக்கு இலங்கை வங்கி தலைமையகத்தின் 3ம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.

பிரதம அதிதியாக  - இலங்கை வங்கி பொது முகாமையாளர் திரு. கே.இ.டீ. சுமணசிரி அவர்கள், சிறப்பு அதிதியாக - முன்னாள் தேர்தல் ஆணையாளர் திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நூல் அறிமுக உரையை - பிரபல எழுத்தாளர் கமல் பெரேரா  நிகழ்த்த, நூலின் முதற்பிரதியை  புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் (புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனம்)     பெற்று கொள்வார்.

இவ்விழாவில் சிவதாண்டவம் உட்பட பல கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மேமன்கவி   


 


Post a Comment

Previous Post Next Post