எல்லாமே ஆச்சரியம்தான்.. அதிசயக்க வைக்கும் யானைகள்!

எல்லாமே ஆச்சரியம்தான்.. அதிசயக்க வைக்கும் யானைகள்!


இரக்கம், கவலை, கோபம் போன்ற உணர்ச்சிகளை எல்லாம் முகபாவனைகள் மூலம் வெளிக்காட்டுவது மனிதர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறோம். ஆனால் நம்மை விடவும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விலங்குகளிடமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் யானைகளுக்கு நம்மை விட பல மடங்கு முகபாவங்களை வெளிப்படுத்த கூடியவை என்பதை கண்டறிந்துள்ளனர்.

பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் லீனா வி. காஃப்மேன் மற்றும் அவரது குழுக்கள் நடத்திய ஆய்வு முடிவுகள், சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் அக்டோபர் 26 அன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் பேச்சிடெர்ம்கள் எனப்படும் தடிமனான தோல் கொண்ட யானையின் நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்துள்ளனர். ஏனெனில் பிற நில வாழ் பாலூட்டிகளை விட யானையின் முகத்தில் நியூரான்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூளையில் யானைகளுக்கு 50,000க்கும் மேற்பட்ட நியூரான்கள் உள்ளன, இது மிகவும் வேலைகளை செய்கிறது. இந்த குறிப்பிட்ட நரம்பு செல்கள் நாம் சிரிக்கும்போது, ​​​​நம் மூக்கை சுருக்கும்போது அல்லது புருவங்களை உயர்த்தும்போது செயல்படுகின்றன. மனிதனுக்கு இத்தகைய நரம்புகள் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை மட்டுமே உள்ளன. ஆனால் டால்பின்களுக்கு கருவில் இருக்கும் போதே 85 ஆயிரம் நியூரான்கள் வரை இருக்குமாம், அதாவது மனிதர்களை விட 10 மடங்கு அதிகமாகும்.

யானையின் முகத்தில் உள்ள நரம்புகள் தும்பிக்கையின் திறமைக்கு பங்களிக்கிறது. தும்பிக்கையின் தண்டில் சுமார் 150,000 தசைகள் மற்றும் தசைநாண்கள் உள்ளன. இது ஒரு மரத்தை வேரோடு பிடுங்கும் அளவுக்கு வலிமையானது, ஆனால் மிகவும் மென்மையானது.

ஆனால் எல்லா யானைகளும் இதை ஒரே மாதிரியாகப் பயன்படுத்துவதில்லை. ஆப்பிரிக்க யானைகளின் தும்பிக்கையின் முடிவில் இரண்டு விரல்கள் போன்ற சேர்க்கைகள் உள்ளன, அவை பொருட்களை கிள்ளுவதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள அனுமதிக்கின்றன. அதாவது மனிதர்கள் சாப்ஸ்டிக்கை பயன்படுத்துவதை போல் யானைகளுக்கு தும்பிக்கையின் கடையில் உள்ள பிளவு பயன்படுகிறது. ஆனால் ஆசிய யானைகள் எதைப் பார்க்கிறதோ அதனை சுற்றி வளைக்க தும்பிக்கையை பயன்படுத்துகின்றன.

இந்த வேறுபாடுகள் இரண்டு இனங்களின் நரம்பியல் நெட்வொர்க்குகளுடன் தொடர்புடையவை என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகளின் முகத்தில் முறையே 63,000 மற்றும் 54,000 நரம்பு செல்கள் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள் தங்கள் காதுகளின் கட்டுப்பாட்டிற்கு மட்டும் சுமார் 12,000 முக நியூரான்களை பயன்படுத்துகின்றன.ஆனால் ஆசிய யானைகள் அதற்கு 7,500 நரம்புகளை மட்டுமே பயன்படுத்துகின்றன.
முழு மனிதனின் முகத்தின் செயல்பாட்டிற்கு 3,000 நியூரான்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், யானைகள் நம்மை விட அதிகமான எண்ணிக்கை நியூரான்களைக் கொண்டுள்ளன. இதனால் நம்மை விட முகபாவங்களை வெளிப்படுத்துவதில் யானைகள் ஒரு ஸ்டெப் முன்னாதாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
news18


 


Post a Comment

Previous Post Next Post