அழகே உன்னை ஆராதிக்கிறேன்
அமிழ்தே உன்னோடிருக்கத் துடிக்கிறேன்
ஆதியில் பிறந்த ஆதாமாய்
நீ கடித்த ஆப்பிளைத் தேடி அலைகிறேன்
ஆதலால் காதலைபிரபஞ்சத்தின்
காற்றலைகளுக்குள் பொதிகிறேன்
பூமியாகச் சுற்றுகிறேன்
வானமாகிக் கவிகிறேன்
வனமாகித் தவிக்கிறேன்
வசந்தத்தில் மின்மினிகளை கோர்க்கிறேன்
வானவில்லைத் தூளியாக மாற்றுகிறேன்
வாயில் தோறும் பூக்களை தூவுகிறேன்
அழகே அருகில் வா ஆராதிக்க விளைகிறேன்
அன்பே விரைந்து வா
முடிவிலி அன்பில்
முகம் பார்க்கும் கவிதைகள்
நளினங்கள் தோறும்
நதியாகும் அழகுகள்
சிணுங்கலில் சிந்திடும்
சிருங்காரக் கோலங்கள்
திசுக்களையும் தாண்டி
ஈர்த்திடும் பிரவாகங்கள்
அழகே அருகில் வா
ஆராதிக்க வேண்டும்
விரைந்து வா
Also read MORE...கவிதைகள்
வெறுமைக்குள் எல்லாமுமாக
வேனிற்கால ஒளியாக
பெருவெளியில் ஒரு திவலையாக
பேரின்பத்தின் நூற்பந்தாக
பேரிகை முழக்கமாக
அணங்கே அழகே
ஆனந்தக் குமிழியே
அருகில் வா..
ஆராதிக்க வேண்டும்
நெருங்கி வா..
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
நீ கடித்த ஆப்பிளைத் தேடி அலைகிறேன்
ஆதலால் காதலைபிரபஞ்சத்தின்
காற்றலைகளுக்குள் பொதிகிறேன்
பூமியாகச் சுற்றுகிறேன்
வானமாகிக் கவிகிறேன்
வனமாகித் தவிக்கிறேன்
வசந்தத்தில் மின்மினிகளை கோர்க்கிறேன்
வானவில்லைத் தூளியாக மாற்றுகிறேன்
வாயில் தோறும் பூக்களை தூவுகிறேன்
அழகே அருகில் வா ஆராதிக்க விளைகிறேன்
அன்பே விரைந்து வா
முடிவிலி அன்பில்
முகம் பார்க்கும் கவிதைகள்
நளினங்கள் தோறும்
நதியாகும் அழகுகள்
சிணுங்கலில் சிந்திடும்
சிருங்காரக் கோலங்கள்
திசுக்களையும் தாண்டி
ஈர்த்திடும் பிரவாகங்கள்
அழகே அருகில் வா
ஆராதிக்க வேண்டும்
விரைந்து வா
Also read MORE...கவிதைகள்
வெறுமைக்குள் எல்லாமுமாக
வேனிற்கால ஒளியாக
பெருவெளியில் ஒரு திவலையாக
பேரின்பத்தின் நூற்பந்தாக
பேரிகை முழக்கமாக
அணங்கே அழகே
ஆனந்தக் குமிழியே
அருகில் வா..
ஆராதிக்க வேண்டும்
நெருங்கி வா..
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை