புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 152

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 152


சூரியன் மத்திக்கு வந்தபோது, செரோக்கியும், ரெங்க்மாவும் யோகியாரைப் பார்ப்பதற்காக  குகைக்கு வந்தனர்.

அவர் அங்கு இல்லாதது கண்டு அவர்கள் தடுமாறிப் போயினர். குகையின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடியபோதிலும் அவரையோ  சகாக்களையோ எங்குமே காணவில்லை.

பதறிப்போன ரெங்க்மா  குகைக்கு வெளியில் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு, பெற்றோரின் ஜாகைக்குள் நுழைந்தாள். அங்கும் அவரைக் காணாததால், பெற்றோரிடம் யோகியாரைக் காணவில்லை என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, குகைக்குத் திரும்பி வந்தாள்.

எங்கு தேடியும் யோகியார் இல்லாததால், அவர் கல்லடிவாரத்திற்குத் திரும்பிச் சென்றிருக்கலாமோ என்ற நினைப்பில், செரோக்கி, ரெங்க்மா, பெற்றோர் பெரியகல் நோக்கி விரைந்து ஓட, அவர்கள் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்ட கிராமத்தவர்கள் என்னமோ ஏதோ என்று நினைத்துப் பதைபதைத்தவர்களாக அவர்களைப் பின்தொடர்ந்து ஓட முழுக் கிராமமுமே அல்லோல கல்லோலப்பட்டு விட்டது.

அவர்கள் எல்லோரும் பெரியகல்லில் போய் நின்றபோதுதான் செரோக்கி, யோகியார் காணாமற்போன விடயத்தை வந்திருந்த கிராமத்தவர்களிடம் கூறிட்டு, வேரேணி மூலம் கல்லடிவாரம் நோக்கி அவன் இறங்கலானான்.
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post