ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னணிலை வகித்தார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 13 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்தார். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் 7,984, தேமுதிக 1,115 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தமிழ்நாடு