கபூரியா ஆக்கிரமிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை மதரஸாவின் மின்சாரம் துண்டிப்பு

கபூரியா ஆக்கிரமிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை மதரஸாவின் மின்சாரம் துண்டிப்பு


பெருந்தகை அல்ஹாஜ் N D H  அப்துல் கபூர் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட பல சொத்துக்களில் மகரகமையில் அமைந்துள்ள கபூரியா மதரஸா ஒரு விலை மதிக்க முடியாத சொத்தாகும்.

அண்மைக்காலமாக சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளை வைத்து இதை கைப்பற்றுவதற்கா சிலர் முயற்சித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கபூரியா கைப்பற்றுதலின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றும் விதமாக குறிப்பிட்ட சிலரால் மதரஸாவின் மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மதரஸா நிர்வாகி ஒருவருடன் தொடர்பு கொண்டபோது.கபூரியாவையும் அதன் சொத்துக்களையும் அதன்  கைப்பற்ற துடிக்கும் தற்போது நிர்வாகத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட நபரின் எழுத்து மூல வேண்டுதலின் பிரகாரம் மதரஸாவின் மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் இது சம்பந்தமாக  மின்சார சபையை தொடர்பு கொண்டு விடயங்களை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
VOICE CLIP-1

மேலும் மதரஸாவின் மின்சாரத்தை துண்டிக்கும் அளவிற்கு கட்ட வேண்டிய நிலுவை பணங்கள் ஏதும் இல்லை எனவும், மின்சார கட்டணம் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.
VOICE CLIP-2

மேலும் நேற்று முதல் மின்சார துண்டு பின் காரணமாக அங்கு படிக்கும் மாணவர்கள் தண்ணீர் வசதி இன்றியும் மின்சாரம் இன்றியும் காரிருளில் கடும் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்ட நிர்வாகி தெரிவித்தார்.

பேருவளை ஹில்மி 



 



Post a Comment

Previous Post Next Post