மகா வரம்....!

மகா வரம்....!



மனதின் சக்தியே
மனிதவாழ்வின்
அடிநாதம்
இன்பத்தின் மூலம்
பிரபஞ்ச விதியின்
சாரம்
ஓடிக்கொண்டே இரு
வாழ்க்கை உன்னைத்
தள்ளிவிட முன்
நீயதைத்தள்ளி
இயக்கிக்கொண்டே இரு
மனதின்
குதிரை வலுவால்
காலக்காற்றைக் கிழித்துப்
பறந்து செல்
உள்ளத் திருப்தியிலேயே
உனது மகிழ்வின் வாயில் அமைந்துள்ளது
அங்கே நிரந்தரமாகக்
குடியேறு
வாயிலின் உள்ளே
பேரதிசயங்கள்
பிரமாண்டமான ஒளியாக
உனையழைத்து
விரியும்
தனித்திறமை
தரமிக்கவை
திறமாதல்
திடமாதல்
யாவும் செயலல்ல
அது மனச்சக்தி
உணர்ச்சிப்பொட்டலங்களால்
மூட்டை கட்டப்பட்டது அது
கோடி
றோசாக்களின்
வாசனையங்கே
பல்லாயிரம்
மின்மினிகளங்கே
உன்னை வரவேற்கும்
மனதின் சக்தியே
மாபெரும்
உரம்
வெற்றிதரும்
மகாவரம்

Dr ஜலீலா முஸம்மில் 
ஏறாவூர்
இலங்கை




 



Post a Comment

Previous Post Next Post