உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் போரில் உயிரிழந்துள்ளார்.

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் போரில் உயிரிழந்துள்ளார்.

27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முட்டில் கொல்லப்பட்டார்.

பக்முட் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது.  

அந்த பக்முட் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங்கியுள்ளார் இதன்போதே அவர் போர்களத்தில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஆண்டில் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, நமது வீரர்களை இழப்பது என்பது துயரமான ஒன்று. அவர்களின் தியாகத்தை நாம் எப்பொழுதும் மறக்கமாட்டோம். எப்போதும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம் என கூறியுள்ளார்.

உயிரிழந்த உக்ரைனிய தளபதி டா வின்சியின் இறுதி கிரியையில் பெருந்திரளான உக்ரைனிய மக்கள் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.




 



Post a Comment

Previous Post Next Post