முன்னே வந்து நிற்கிறது..!

முன்னே வந்து நிற்கிறது..!


எல்லாவற்றையும்
என்னால்
கட்டுப்படுத்த முடியும்...
இதயத்தின்
விசும்பலையும்
அதன்
விவாதங்களையும்
இன்னோரன்ன
முறைப்பாடுகளையும்
எல்லாவற்றையும்
எனக்குள்ளே
புதைத்துக்கொள்ள முடியும்...
வெடிக்கும்
ஆக்ரோசங்கள்
வெள்ளந்தி
அனுதாபங்கள்
வதைக்கும்
வேதனைகள்
எனக்குள்ளே
எல்லாம்
மூடி வைத்துக்
கொ(ல்ல)ள்ள முடியும்
காலாவதியான கையசைப்புகள்
கத்திரிக்கும் கோரங்கள்
இரணங்களாலான வடுக்கள்
இப்படிப் பலவற்றையும்
பலவாறு
தேற்றி ஆற்றிக்கொள்கையில்...
ஒன்றை மட்டும்
கட்டுப்படுத்த முடிவதில்லை...
எப்பாடுபட்டாவது
எல்லா முனங்கல்களையும்
என்னுள் அடங்கச்செய்ய...
முட்டிக்கொண்டு
முதலாவதாய்
முன்னே நிற்கிறது
இந்தக் கண்ணீர்!

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை



 



Post a Comment

Previous Post Next Post