கழுகுதரும் பாடம்

கழுகுதரும் பாடம்


மழையில் நனையாமல் செல்வதற்கு மேக
அலைகளுக்கு மேலே பறக்கின்ற ஆற்றல்
கலையறிந்த புள்ளே! மனிதன் குடைக்குள்
நிலைகொண்டால் மட்டும் நனையமாட்டான்! உந்தன்
நிலைவேறு மண்ணகம் வேறு.

சிக்கலில் மூழ்காமல் மாந்தர்கள் சிக்கலையே
அக்கறையாய்த் தாண்டும் நிலையெடுத்தால் சிக்கலை
வெற்றிகொண்டு வாழலாம்!
சிக்கலுக்கும் தீர்வுண்டு!
சிக்கல் தவிர்த்தேதான் வாழ்.
மதுரை பாபாராஜ்



 



Post a Comment

Previous Post Next Post