உஷார்... 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

உஷார்... 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

பசி, தூக்கம் போன்றவற்றை மனிதன் முழுமையாக கட்டுப்படுத்திவிட முடியாது. ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டு நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் போதுமான நேரத்திற்கு தூங்குவதில்லை. ஞாயிறு விடுமுறை நாளில் மட்டும் வெகுநேரம் தூங்குவதை சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். ஆனால், வார நாட்களில் போதுமான அளவுக்கு தூங்குவதில்லை.

சராசரியாக ஒரு மனிதன் நாளொன்றுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும். அந்த தூக்கமும் கூட ஆழ்ந்த உறக்கமாக, நிம்மதியான உறக்கமாக இருக்க வேண்டும். அதுதான் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் புத்துணர்ச்சி தருவதாக அமையும். இதற்கு குறைவான நேரம் நீங்கள் தூங்குபவர் என்றால் உங்களுக்கு பின்வரும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சளி மற்றும் காய்ச்சல் : நாம் தூங்கும்போது நம் உடல் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அத்துடன் தூங்கும்போது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஆகவே, போதுமான அளவுக்கு நீங்கள் தூங்கவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உங்களை எளிதில் தாக்கும்.

சிந்தனை மற்றும் கவனத்திறன் பிரச்சினை : நம் மூளையின் மத்திய நரம்பு மண்டலப் பகுதி சிறப்பாக வேலை செய்வதற்கு ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் அவசியமாகும். ஆனால், போதுமான அளவுக்கு தூக்கம் இல்லாதபோது மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்காமல் அதன் செயல்பாடு குறையத் தொடங்கும். இதனால், கவனித்தல் திறனுக்கு சிக்கல் உண்டாகலாம். மூளையில் இருந்து உடல் பாகங்களுக்கு செல்லக் கூடிய சிக்னல்கள் தாமதமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் : நாம் தூங்கும்போது நம் உடல் ஆண்டிபயாடிக்குகளை உற்பத்தி செய்கிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற புறதாக்குதல் தொற்றுகள் நம் உடலுக்குள் நுழைகின்றபோது, அவற்றை எதிர்த்து போரிடுவதற்கு இந்த ஆண்டிபயாடிக்ஸ் அவசியமாகும். ஆனால், போதுமான தூக்கமின்றி உடல் பலவீனம் அடைகின்றபோது நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

செரிமானம் பாதிக்கும் : நாம் தூங்கும் செரிமானம் அதி வேகத்தில் நடக்கும். இன்னும் சொல்லப் போனால் செரிமானம் இலகுவாக நடக்க தூக்கம் உதவியாக இருக்கும். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் செரிமானக் கட்டமைப்புச் சுவர்களில் அழற்சி உண்டாகும். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதோடு, அதன் விளைவாக மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உடல் எடை அதிகரிக்கும்  : சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கத்தின்போது நம் உடலில் புதிய செல்கள் உற்பத்தி ஆகின்றன. ஆனால், தூக்கமின்மையால் இந்த செயல்பாடு தடைபடும் நிலையில், உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி உடல் எடை அதிகரிக்கக் கூடும்.
news18




 



Post a Comment

Previous Post Next Post