
அப்போது ஒரு பெரிய பரிசு பொருளில் ஹோம் தியேட்டர் இருந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். உடனே அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு ஹோம் தியேட்டரில் பாடல் கேட்க முடிவெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மின்சார போர்டில் வயரை இணைத்து விட்டு ஹோம் தியேட்டரை இயக்கி உள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்துள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாட்டில் வீட்டின் உள் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களை மீட்க முயன்றனர். அப்போது புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா மேராவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து மாப்பிள்ளையின் சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒருவயது சிறுவன் உட்பட 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்குச் சகோதரர் ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹோம் தியேட்டர் வெடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments