17வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை.. ரூ.8 லட்சத்திற்கு விற்ற தாய்.. மதுரையில் அதிர்ச்சி!

17வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை.. ரூ.8 லட்சத்திற்கு விற்ற தாய்.. மதுரையில் அதிர்ச்சி!


மதுரை  மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 7ம் தேதி பேரையூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 நாட்கள் தாயும், சேயும் சிகிச்சை பெற்றுள்ளனர். 
பின்னர் அங்கிருந்து யாருக்கும் தெரிவிக்காமல் வீடு திரும்பியதால், சந்தேகமடைந்த கிராம செவிலியர் காந்திமதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது குழந்தையை காணவில்லை. செவிலியர் எழுப்பிய கேள்விகளுக்கு சிறுமியின் தாய் உள்ளிட்டோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த செவிலியர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர் விசாரணையில் 8 லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் மாரியம்மாள், குழந்தையை வாங்கிய தேஜஸ்வரி, குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த சுந்தரலிங்கம், சீனிவாசன், உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் செவிலியர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் தாமரைச்செல்வன், செவிலியர் உட்பட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SOURCE:news18


 



Post a Comment

Previous Post Next Post