நீண்ட நாள் முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு என்ன?

நீண்ட நாள் முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு என்ன?


26 வயதுடைய எனது முகத்தில் கடந்த 8 வருடங்களாக அதிகளவான முகப்பரு காணப்படுகிறது. பல வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும் பருத் தொல்லையிலிருந்து மீள முடியவில்லை. சிகிச்சை செய்கின்ற நாட்களில் குறைவதும் பின்னர் பருக்கள் வருவதுமாக காலம் கழிகிறது. எனக்கு உடலில் ஆங்காங்கே சீழ் கட்டிய பருக்களும் தோன்றுகின்றன. இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள்.
பாத்திமா சமீரா, கல்முனை

 
ஒருவர் பருவமடையும் போது பருக்கள் தோன்றுவது இயல்பு. இவ்வாறு பருக்கள் பருவ வயதை அடையும் போது தோன்றுவதற்குக் காரணம் உடம்பினால் அதிகளவு ஹோர்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவ தனால் ஆகும். ஆனால் ஒவ்வொருவருமுடைய உடல் சுபாவத்திற்கு ஏற்ப ஒரு சிலருக்கு முகப்பரு தோன்றாமலும் மற்றும் பலருக்கு தீவிரமாக பருக்கள் ஏற்பட்டு முகத் தோற்றத்தையே அசிங்கப்படுத்தி விடுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஒரு முது மொழி. ஆனால் பெரும்பாலானோரினது அகம் அழகாக இருந்தாலும் பருக்கள் முகத்தின் அழகைக் கெடுப்பதனால் இவர்களின் உள் நலமும் பாதிக்கப்படுகிறது.

தோல் ஒரு கழிவகற்றும் உறுப்பு என்பது எம் அநேகருக்குத் தெரியாது. வியர்வை என்பது செறிவு குறைக்கப் பட்ட சிறுநீர் எனச் சில மருத்துவப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளது. எனவே வியர்வை மூலம் சிறுநீரில் காணப்படுகின்றது போன்று அநேக கழிவுப் பொருட்கள் உள்ளன.

எமது தோலில் பல கோடிக்கணக்கான சிறிய துவாரங்கள் உள்ளன. இவையூடாகவே வியர்வையுடன் பல கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. அதேபோன்று தோலின் துவாரத்தினூடாக சூரிய கதிர்களும் உட்சென்று சில விட்ட மின்களைத் தொகுக்கின்றன. இத்தனை தொழில்களைச் செய்யும் தோலின் துவாரங்கள் அடைபட்டால் பல நோய்கள் ஏற்படும். அத்துடன் பருவ வயதை அடைந்தவர்களுக்கு சிறு வயதினரின் உடம்பில் இருக்கும் ஹோர்மோன்களை உடம்பில் இருக்கும் ஹோர்மோன்களை விடவும் பன்மடங்கு ஹோர்மோன்களும், ஒருவகைப் புரதமும், கொழுப்புத் தன்மை கொண்ட பதார்த்தங்களும் உற்பத்தி யாகின்றன. இவ்வாறு அதிகமாக உற்பத்தியாகும் புரதங்களும் எண்ணெய்ப் பதார்த்தங்களும் வெளியேற முடியாமல் போகும் போது அவை தேங்கி நின்று பருக்களை ஏற்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூறினால் அதிகளவு உற்பத்தியாகும் எண்ணெய்ப் பதார்த்தங்கள் வெளியேறப்படுவதில் செயற்படுகின்ற தடையினால் தான் பருக்கள் ஏற்படுகின்றன.

பருக்கள் 80 வீதமான இளம் வயதினரைத் தாக்குகின்றன. பொதுவாக பருக்கள் முகத்தில் தோன்றினாலும் கூட நெஞ்சு, முதுகு உட்பட உடம்பின் மேற்பகுதியைத் தாக்கக் கூடியது. பெண்களின் மாதவிடாய்ச் சக்கரத்தின் நடுப்பகுதியில் பருக்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. இதற்குக் காரணம் ஒருவகை ஹோர்மோனின் அளவு மாதவிடாய் சக்கரத்தின் நடுப்பகுதியில் கூடுவதாகும்.

அதிக பருக்கள் பெண்களின் சூலகத்திலும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய ஒருவகைச் சுரப்பியிலும் ஏற்படுகின்ற நோய்களினாலும் ஏற்படுகின்றன. இதன்போது பருக்களுடன் முகம், மார்பகம் போன்ற பகுதிகளில் மயிர்கள் அல்லது உரோமங்கள் காணப்படும்.

அத்துடன் இவர்களது மாதவிடாய்ச் சக்கரம் ஒழுங்காக இருக்காது. பருக்கள் வராமல் தடுப்பதாயின் நாம் உண வுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனிப்புக் கூடிய உணவு வகைகளான சொக்லேட், மென்பான வகைகளையும் மற்றும் பட்டர், பொரித்த உணவு வகைகள், பதனிடப்பட்ட உணவு வகைகள், அதிக உப்புச் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள் போன்றவைகளைத் தவிர்ப்பதோடு, மன அழுத்தமான வாழ்க்கையையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 3 முறையாவது மென்மையான சவர்க்காரத்தைப் பாவித்து முகத்தை கழுவுதல் முக்கியம். மேலும் சகல உணவுகளுக்கும் மிகக் குறைந்த அளவில் சீனி சேர்க்கப்படுவதோடு அதிக நார்ச்சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், மரக்கறி வகைகள், தானிய வகைகள், பழ வகைகள் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வதோடு அதிகளவு நீரையும் பருக வேண்டும்.

பருக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பருக்களை அடிக்கடி தொடுவதையும் நசுக்குவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் நரம்புகள் தூண்டப்பட்டு பருக்களின் தீவிரத்தன்மை மேலும் கூடும். மேலும் செயற்கைப் பொருட்களடங்கிய பூச்சு மருந்துக்களையும் பருக்கள் ஏற்படாமலிருப்பதற்கான மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகளையும் தவிர்ப்பதோடு, முகத்திற்கு நீராவி பிடிப்பதும் மிக மிக முக்கியமாகும். அத்துடன் குடும்பக்கட்டுபாடு வில்லைகளைத் தவிர்ப்பதோடு, நீங்கள் வேறு நோய்களுக்காக பாவிக்க கூடிய (விசேடமாக வலிப்பு நோய்க்கு) மாத்திரைகளை உங்கள் வைத்தியரை கலந்தாலோசித்து பருக்களை உண்டு பண்ணக் கூடிய மாத்திரைகள் இருந்தால் அவற்றுக்குப் பதிலாக வேறு ஏதாவது மாத்திரைகளை சிபாரிசு செய்யும்படி வைத்தியரை கேட்கவும்.

மேலும் பருக்களுடன் முகத்தில் உரோமம் முளைத்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவைகள் இருந்தால் பெண் நோயியல் சம்பந்தப்பட்ட வைத்தியர் ஒருவரைக் கலந்தாலோசிக்கவும். அதற்கான ஒழுங்கினை தேவைப்படுவோருக்குச் செய்து தரலாம்.

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் பல சிகிச்சை முறைகளை கையாண்டும் எதுவிதப் பயனும் இல்லை எனக் குறிப் பிட்டுள்ளார். எனவே நீங்கள் மருந்துகளை மாத்திரம் உட்கொள்ளாமல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு உட் கொள்வதிலும் மிகவும் கட்டுப்பாடாக
குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு உட்கொள்வதிலும் மிகவும் கட்டுப்பாடாக இருப்பதோடு மன அழுத்தமற்ற வாழ்க்கையையும் மேற்கொள்ள வேண்டும்.

யுனானி வைத்தியத் துறையில் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப் பட்ட பல வெளிப் பூச்சி மருந்துக்களும் உட்கொள்வதற்குரிய மருந்துக்கள் உட்பட பல சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் பலர் பயன்பெற்று உள்ளனர். 

இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக இளம் சந்ததியினருக்கு ஒரு செய்தியாக அதாவது நாம் இயற்கையில் ஒரு அங்கம். இயற்கை எமது நண்பன்.

எனவே இந்த நட்பு எமது சுகவாழ்வுக்காக வேண்டிய பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இயற்கை உணவு வகைகள், மூலிகைகள், நீர், காற்று எனப் பல வகையான ஏற்பாடுகளை எமக்காக ஒழுங்கு செய்து தந்துள்ளது. எனவே நாமும் இயற்கை முறைகளைப் பின்பற்றி இயற்கையின் நண்பனாக இருந்து நலமுடன் வாழ்வோம்.

DR.NASEEM


 



Post a Comment

Previous Post Next Post