2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி


ஒடிசா இளைஞருடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தரும்படி இரு குழந்தைகளுடன் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்.

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் கட்டிட பணி நடைபெற்று வரும் இடத்தில் தங்கி பணி செய்து வந்த நிலையில், அதே கட்டிடத்தில் கட்டிட வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்ற இளைஞருடன் நஜிபுல் ஷேக்கின் மனைவி சஹினாக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் சில நாட்களில் திருமணம் தாண்டிய உறவாக மாறியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு போன நஜிபுல் ஷேக் மாலை வீடு திரும்பியதும் வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த நிலையில் மனைவி சஹினா இல்லாதது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மனைவி கிடைக்காத நிலையில் கணவன் உடன் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாராவும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. மனைவி மீது இருந்த சந்தேகம் வலுக்கவே நஜிபுல் ஷேக் தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாராவுடன் சென்ற எனது மனைவியை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார். புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர். பெற்ற பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு சில நாட்களே அறிமுகமான கள்ளக் காதலனுடன் மாயமான சஹினாவை பிரிந்து இருகுழந்தைகளும் தாய் இல்லாமல் தவித்து வருகின்றன. தன்னுடைய குழந்தைகளுக்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவியை மீட்டு தரும்படி கணவன் கொடுத்த புகார் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post