91.வினா : மங்கலம் என்பது எது?
விடை : குடும்பத்திற்கு மங்கலமாகத் திகழ்வது நல்ல மனைவியே
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று.அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.(60)
92.வினா : பெறவேண்டிய பேறுகளில் சிறப்புடையது எது?
விடை : அறிவு நிறைந்த மக்களைப் பெறுவதே ஆகும்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.(61)
93.வினா : யாருக்கு பழியும் தீமையும் வராது?
விடை : நற்பண்புமிக்க மக்களைப் பெற்றவருக்கு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்(62)
94.வினா : அமிழ்தினும் இனியது எது?
விடை: தம் குழந்தைகளின் கைகளால் பிசையப்பட்ட உணவு
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.(64)
95.வினா : குழலிசை, யாழிசை இனியது என்பவர் யார்?
விடை : தம் மக்களின் மழலை சொல் கேளாதவர்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.(66)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்
சிறப்பு... அருமையான பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள்... வேட்டையின் ஊடக அறப்பணி சிறக்கட்டும்...
ReplyDelete