வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-21

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-21


101.வினா : அன்பு எதைத் தரும்?
விடை:நட்பு என்ற சிறப்பைத் தரும் 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.(74)

102.வினா : வீரத்திற்குத் துணை நிற்பது எது?
விடை: அன்பு 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை,(76)

103.வினா : பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்ப்பது போன்றது எது?
விடை: அன்பெனும் ஈரமற்ற வாழ்க்கை 
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.(78)

104.வினா : வெளி உறுப்புகளால் ஒரு பயனும் இல்லை யாருக்கு?
விடை : உள் உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு 
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.(79)

105. வினா : உயிர்நிலை எதன் வழிப்பட்டது?
விடை : அன்பின் வழிப்பட்டது 
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.(80)

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post