அமெரிக்காவின் ஆதரவுடன் காஸாவில் 21,000 க்கும் மேற்பட்ட மக்களைக் இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவுடன் காஸாவில் 21,000 க்கும் மேற்பட்ட மக்களைக் இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

காசாவில் நடக்கும்  "இனப்படுகொலைப் போரை" நிறுத்தத் தவறியதற்காக சர்வதேச சமூகத்தை கண்டித்து ஹமாஸின் சர்வதேச உறவுகளின் தலைவர் Basem Nail அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த குற்றங்கள் இஸ்ரேலிய கைகளால் செய்யப்பட்டிருந்தாலும், அவை அமெரிக்க நிர்வாகத்தால் நிதியுதவி மற்றும் ஆதரவு பெற்றன. எனவே, பிடென் நிர்வாககமும் , அவரது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலாளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
நமது மக்களுக்கு எதிராக நடந்துவரும் இந்த இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்வதிலும், திட்டமிடுவதிலும் அமெரிக்காவுக்கு  நேரடிப் பங்கு உள்ளது" என்று அவர் ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.

"இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதற்கு சர்வதேச சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும்" என்றும்  Basem Nailமேலும் கூறினார்.


 



Post a Comment

Previous Post Next Post