கணவனுக்கு விரித்த வலை.. நடுரோட்டில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

கணவனுக்கு விரித்த வலை.. நடுரோட்டில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. அம்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

கணவனுக்கு விரித்த வலையில்  28 வயது பெண் நடுரோட்டில்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் ICF காலனி குடிசை மாற்று வாரியம்  குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி நந்தினி(28).  சதீஷ் கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்விரோதம் காரணமாக  பாலாஜி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைதாகியிருந்தார். பின்னர் அவர் விடுதலையாகி அங்கிருந்து வெளியேறி சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நந்தினியின் உறவினர் மதன் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. அதில் நந்தினி பங்கேற்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் அவரை வழிமறித்து பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் நந்தினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நந்தியின் கணவன் சதீஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அதே பகுதியியை சேர்ந்த போண்டா பாலாஜியை கடந்த 2020 ஆம் ஆண்டு படுகொலை செய்துள்ளனர். இதனால் தீராத பகையில் இருந்த பாலாஜி தரப்பினர் அவரது கொலைக்கு பழிவாங்குவதற்கு சதீஸ்குமாரை தீர்த்து கட்ட சதி திட்டம் திட்டி பலமுறை கொலை முயற்சி செய்துள்ளனர். இது எதிலும் சதீஷ்குமார் சிக்காத நிலையில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

அதன்படி உறவினரின் இறுதி சடங்கு நிகழ்வுக்கு எப்படியும் சதீஷ் வருவார். அப்போது அவரை தீர்த்து கட்டிவிடலாம் என எதிர் தரப்பினர் காத்து கொண்டிருந்தனர். இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட காவல்துறை சதீஷ் உள்ளிட்ட யாரையும் வர கூடாது என எச்சரித்துள்ளது. மேலும் இறுதி சடங்கில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எதிர்பாராத நிலையில் இறுதி சடங்கில் சதீஷின் மனைவி நந்தினி பங்கேற்றுள்ளார். பின்னர் இறுதி சடங்கு போலீசார் பாதுகாப்புடன் துவங்கியது.

இந்நிலையில், துக்க நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய  நந்தினியை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் மற்றும் தொழிற்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் டில்லிபாபு, ஜெயகிருஷ்ணன் தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை  தீவிரமாக  தேடி வருகின்றனர்.

முன்னதாக கொலை நடந்த இடத்தில் ஆவடி காவல் ஆணையராக இணை ஆணையர் விஜயகுமார் நேரில் விசாரணை மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் ICF காலனி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உறவினரின் துக்க நிகழ்வுக்கு பங்கேற்று வீடு திரும்பும்போது பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18


 



Post a Comment

Previous Post Next Post