இயல்பு நிலையே வா! மக்களைக் காப்பாற்று!

இயல்பு நிலையே வா! மக்களைக் காப்பாற்று!


மழைநீரோ வீடுகளைச் சூழ்ந்திருக்கும் கோலம்!
மழைநீர் வடியாமல் தத்தளிப்பில் மக்கள்!
அடுக்ககம் மற்றும் தனித்தனி வீட்டில்
இருப்பவர்கள் எல்லோரும் தங்குமிடம் நோக்கிப்
படகுகளில் மக்கள் வெளியேறும் காட்சி!
அவசியத் தேவைக்கே அல்லாடும் வாழ்க்கை!
புரட்டித்தான் போட்டதே மிக்ஜாம் புயல்தான்!
இயல்பான வாழ்க்கையைக் காண்போமா மீண்டும்?
விரைவில் திரும்பலாம் நம்பு.

மதுரை பாபாராஜ்



 



Post a Comment

Previous Post Next Post