அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் தாக்குதல்

அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் போராளிகளுடனான போரில் படு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம்,மீண்டும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது.

அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் இருக்கும் அல்-மகாசி  அகதிகள் முகாம் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது.முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்ட தாக்குதலில் 70 பாலஸ்தீனிய பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களிலும் அதற்கு முந்தைய நாளிலும், அல்-மகாசி மற்றும் பிற பகுதிகளில் தனது சோதனைகளை தீவிரப்படுத்தி, ஏற்கனவே வெளியேற்றப்பட்டவர்களால் நிரம்பி வழியும் காசா பகுதியின் தெற்கே மக்களைத் தப்பிச் செல்ல நிர்ப்பந்தித்தது.

பாதுகாப்பான பகுதிகள் என்று இஸ்ரேல் இராணுவத்தால் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மக்களை வெளியேற்றி ,அங்கு கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது.


 



Post a Comment

Previous Post Next Post