கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி!! என்ன காரணம் தெரியுமா?

கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி!! என்ன காரணம் தெரியுமா?

கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார். நினைத்தாலே பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்துள்ளார். இதற்கிடையே 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார். இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசி ஃப்ளஷ் செய்துள்ளார். இதனால் கணவின் ஆணுறுப்பு, கழிவறை தொட்டுக்கு உள்ளே சென்று விட்டது.

இதன்பின்னர் நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு தான் செய்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக புதைத்தீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, அதனை மீண்டும் ஆபரேஷன் மூலம் ஒட்ட வைத்து விட முடியும். இதனை தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என்று அந்த மனைவி பதில் அளித்துள்ளார்.

ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

முன்னதாக இந்தோனேஷிய நாட்டில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அங்கு உடலுறவுக்கு மறுத்தால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று இளம்பெண்ணை அவரது ஆண் நண்பர் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், ஆண் நண்பரை தாக்கி அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்தார்.

news18


 



Post a Comment

Previous Post Next Post