Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-23


111.வினா : தீமை குறைந்து நன்மை பெருகும் எப்போது?
விடை: விருப்பத்துடன் இன்சொல் கூறும் போது 
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.(96)

112. வினா : இம்மையும் மறுமையும் இன்பம் தருவது எது?
விடை : சிறுமைத்தனமற்ற இனிய சொற்கள் 
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்.(98)

113.வினா : கனி எது? காய் எது?
விடை: இன்சொல் கனி; கடுஞ்சொல் காய் 
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.(100)

114. வினா : செய்யாமல் செய்த உதவிக்கு ஈடாகாதது எது?
விடை: இவ்வுலகையும் வானத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.(101)

115. வினா : இவ்வுலகை விடப் பெரியது எது?
விடை : காலத்தில் செய்த உதவி 
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.(102)

(தொடரும்)


 



Post a Comment

0 Comments