
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த போது செங்கம்பளம் விரித்து அவர்கள் வரவேற்றப்பட்டார்கள். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச தரப்பினர் கப்பலில் உல்லாச விருந்தில் ஈடுபட்டுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் தெளிவு படுத்துமாறு அரச தரப்பின் உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்தினார்கள்.துறைமுக விடயதானத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் அவர்களை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேநீர் கொடுப்பதில் தவறென்ன உள்ளது? . அன்று இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்துக்கு துறைமுக அதிகார சபையின் நிதி செலவழிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச எம்.பி.க்கள் கலந்து கொண்ட விருந்துபசாரத்தை திருட்டுத்தனமாக படமெடுத்து அதனை ஊடகங்களுக்கு வழங்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.அத்துடன் பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட வேண்டும்” என தெரிவித்தார்.
tamilmirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments