221. வினா : புறந்தூய்மை எதனால் ஏற்படும்?
விடை: நீரினால்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்
படும்.(298)
222. வினா : அகந்தூய்மை எதனால் ஏற்படும்?
விடை : உண்மை பேசுவதால்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்
படும்.(298)
223. வினா : சான்றோர் போற்றும் விளக்கு எது?
விடை: உண்மை பேசுவதாகும்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே
விளக்கு.(299)
224. வினா : சினம் எதனைக் கொல்லும்?
விடை : முக மலர்ச்சி, மன மலர்ச்சி இரண்டையும்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
(304)
225. வினா : தன்னையே கொல்லும் - எது?
விடை : சினம்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே
கொல்லும் சினம்.(305)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்