வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-45

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-45


221. வினா : புறந்தூய்மை எதனால் ஏற்படும்?

விடை: நீரினால்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.(298)

 222. வினா : அகந்தூய்மை எதனால் ஏற்படும்?

விடை : உண்மை பேசுவதால்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.(298)

 223. வினா : சான்றோர் போற்றும் விளக்கு எது?

விடை: உண்மை பேசுவதாகும்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.(299)

 224. வினா : சினம் எதனைக் கொல்லும்?

விடை : முக மலர்ச்சி, மன மலர்ச்சி இரண்டையும்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
(304)

 225. வினா : தன்னையே கொல்லும் - எது?

விடை : சினம்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.(305)

 (தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post