226. வினா : தன்னை காக்க என்ன செய்ய வேண்டும்?
விடை: கோபம் வராமல் காக்க வேண்டும்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.(305)
227. வினா : சினம் எதனை அழிக்கும்?
விடை : தன்னைச் சார்ந்தவரையும், தன் இனத்தையும்
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.(306)
228. வினா : நினைத்தது எல்லாம் பெறுவது எப்போது?
விடை: மனதில் சினம் கொள்ளாத நிலையில்
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.(309)
229. வினா : இறந்தவர்க்கு நிகரானவர் யார்?
விடை: அளவற்ற சினம் கொள்பவர்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (310)
230. வினா : துன்பம் செய்தாரை எவ்வாறு தண்டித்தல் வேண்டும்?
விடை : அவர்களே வெட்கப்படும்படி நன்மை செய்வதன் மூலம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.(314)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்