வசிகர வார்த்தையாலே
வசியம் வச்சவரே
வயசுப் பொண்ண
வளைச்சிப் போட்டவரே
வரம்புக் காட்டுக்குள்ள
வரம்பு மீறியவரே
வக்கணையா ருசிக்க
நோட்டம் போட்டவரே
விளைஞ்சு போச்சு
வெத்தலத் தோட்டமையா
வரிசையிலே வருகிறது
கரிசல்மண் புழுக்களய்யா
வரஞ்சி விட்டேன்
நெஞ்சத்திலே ஒன்னய
வழுக்கி நழுவி
ஓடிக்கிறேன் நானுமையா
வரன் கேட்டுக்க
வருவாயோ சொல்லையா
வழிமீது விழி
வைத்திருக்கேன் நானையா
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை