231. வினா : துன்பம் செய்தாரை எவ்வாறு தண்டித்தல் வேண்டும்?
விடை : அவர்களே வெட்கப்படும்படி நன்மை செய்வதன் மூலம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.(314)
232. வினா : அறிவினால் ஆகும் பயன் யாது?
விடை: பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதுதல்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.(315)
233. வினா : பிற்பகல் தாமே வரும் எது?
விடை : முற்பகல் நாம் செய்த தீங்கு
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.(319)
234. வினா : துன்பம் எல்லாம் யாரை வந்தடையும்?
விடை: துன்பம் செய்தவரையே துன்பம் வந்தடையும்
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.(320)
235. வினா : அறவினை என்பது யாது?
விடை : கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.(321)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்