உன்னை இன்றி யாருமில்லை!

உன்னை இன்றி யாருமில்லை!


உயர்ந்த மாங் கிளையில். 
கூடி வாழ்ந்த பூங்குருவி.
நீ பறந்த தேசம் என்ன?
பிரிந்த கோபம் என்ன?
மறந்த மாயம் என்ன ?
காதல் துறந்த கோலம் என்ன?
இனி என் நிலை தான் என்ன?
என் நிலை தான் என்ன?  
நிலை தான் என்ன?

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல
உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.
துன்பம் துணையில்.
இன்பம் தொலைவில். 
நீ இல்லை .
வாழ்வு இல்லை. 
இனி எனக்கு  அது இல்லை

வங்கக் கடல் விழி அருகே. 
என் ஜீவன் அதன் உள்ளே.
நீ மறுத்தால் மூச்சு நிறுத்தம்.
கரம் கொடுத்தால்  பேச்சு பிறக்கும்.
காமம் இல்லை.
மோகம் இல்லை.

காதலிலே கள்ளம் இல்லை.
உள்ளத்திலே நீ தான் முல்லை.
நெஞ்சோடு அணைக்க வந்தேன்.
கண்ணே நெஞ்சோடு அணைக்க வந்தேன்

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல

உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.
உயர்ந்த மாங் கிளையில்.
கூடி வாழ்ந்த பூங் குருவி

உணர்வலையோ பிணைந்திருக்க. 
உறவு வழி உதறிச் செல்ல.
கூத்தும் ஒரு நாள் முடியும்.
உன் வேடம் அன்று கலையும்.
பூவில் வாசம் உண்டு.

பூவை நெஞ்சில் பாசம் இல்லை.
தொடும் தொலையில் நிலவும் இல்லை.
தொடும் நிலையில் நீயும் இல்லை.
தொடர்வேன் நானும் உன்னை.

காலம் கொண்டு போகும் வரை.
கட்டை தனில் வேகும் வரை.
கண் மணியே காத்திருப்பேன்.
ஆவியான பின்னும் பாவி நான்
உனக்காகக் காத்திருப்பேன் 

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல
உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.

உயர்ந்த மாங் கிளையில். 
கூடி வாழ்ந்த பூங்குருவி.
நீ பறந்த தேசம் என்ன?
பிரிந்த கோபம் என்ன?
மறந்த மாயம் என்ன ?
காதல் துறந்த கோலம் என்ன?
இனி என் நிலை தான் என்ன?
என் நிலை தான் என்ன?  
நிலை தான் என்ன? 

ஆ.எஸ்.கலா


 



Post a Comment

Previous Post Next Post