புதிய அடையாள அட்டை இருந்தால் மாத்திரமே இனி பாஸ்போர்ட்

புதிய அடையாள அட்டை இருந்தால் மாத்திரமே இனி பாஸ்போர்ட்


புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக தாம் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடவுச்சீட்டைப் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகின்றன என்றார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு, குடியல்வுத் திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

எனவே புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

lankatruth


 



Post a Comment

Previous Post Next Post