236. வினா : இரட்டைக் கொள்கையை வலியுறுத்தும் குறள் கருத்து எது?
விடை: பகுத்துண்ணல், பல் உயிர் காத்தல்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.(322)
237. வினா : நூலோர் கூறியவற்றில் தலையானது எது?
விடை: தானும் உண்டு, பிற உயிர்களையும் காத்தலே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.(322)
238. வினா : கூத்து பார்க்கும் கூட்டம் போன்றது எது?
விடை: செல்வம் வருவதும் போவதும்
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.(332)
239. வினா : உயிரை அறுக்கும் வாள் எது?
விடை : ஒவ்வொரு நாளின் முடிவும் உயிரை அறுக்கும் வாள் ஆகும் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.(334)
240. வினா : மரணம் வருவதற்குள் எதைச் செய்தல் வேண்டும்?
விடை : நற்செயல்கள்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.(335)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்