கண்ணகி!

கண்ணகி!


கண்ணகி வீட்டுத் தெரு முனையில்
காக்கா புடிச்ச கருவாச்சி 
நாக்கைப்  புரட்டிப் போட்டு
வார்த்தையை உருட்டி விட்டாள்
வந்து விழுந்துச்சு காதிலே
அருவா முனையாட்டம்
திக்கெட்டுப் போனேன் நானும்
வெக்குண்டு போனான்
கூட்டிட்டுப் போன மாமன் 
வாயாடி எம்புட்டு பேசிப்புட்டா
சிம்பட்டு சின்ன மாமியாரோ
என்னைய நோக்கி கும்பிட்டு
வழி அனுப்பி வச்சிப்புட்டா
நொங்குக் கண்ணுக் காரி
இங்கிட்டு வாடி
மங்கிக்காத பொன் தாலியாலே
நங்கூரம் போட்டுக்கிறேன்
உன்னைய  வாரி
அப்புறமா பார்த்துக்கோடி
ஒன்னோட வாழ்க்கையோ சேரி 
என்னோட காட்டில்  மாரி 
இத்தனையும் நடத்திக்
காட்டிக்குவான் இந்த 
பயப்புள்ள பாரி

கலா


 



Post a Comment

Previous Post Next Post