241. வினா : உலகின் பெருமை எது?
விடை : நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதே
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.(336)
242. வினா : மக்கள் எண்ணம் எத்தகையது?
விடை: கோடிக்கும் மேலாகும்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப் கோடியும் அல்ல பல.(337)
243. வினா : உடலுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு யாது?
விடை: முட்டையும் அதிலிருக்கும் பறவைக் குஞ்சு பிரிந்து செல்வதையும் போலாகும்
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.(338)
244. வினா : பிறப்பு எதைப் போன்றது?
விடை : உறங்கி விழிப்பதைப் போன்றது
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.(339)
245. வினா : மரணம் எதைப் போன்றது?
விடை: உறங்குவது போன்றது
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.(339)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்