இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!


புதிய பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீருடன் (Gautam Gambhir) இந்திய கிரிகெட் அணி (India national cricket team) இன்றையதினம் (22) இலங்கையை (Sri Lanka) வந்தடைந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக 3 ரி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இருபதுக்கு 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு நாள் தொடரின் தலைமையை ரோஹித் சர்மா தொடர்வார். இந்திய அணியின் புதிய துணை பயிற்றுவிப்பாளராக அபிஷேக் நாயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயற்படவுள்ளார்.

மேலும், ஒருநாள் மற்றும் ரி20 அணிக்கு சுப்மன் கில்(Subman Gill) துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிகெட் அணிக்கு சிறப்பான முறையில் வரவேற்களிக்கப்பட்டுள்ளது. 

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post