தரை வழியாக மட்டுமல்ல, வான்மற்றும் கடல் வழியாகவும் இஸ்ரேலை தாக்குவோம்- ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை!

தரை வழியாக மட்டுமல்ல, வான்மற்றும் கடல் வழியாகவும் இஸ்ரேலை தாக்குவோம்- ஹிஸ்புல்லா கடும் எச்சரிக்கை!


இஸ்ரேலியப் படைகளுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவிற்கும் இடையே முழு அளவிலான போர் மூளலாம் என்ற பரவலான செய்திகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இஸ்ரேலுடன் போர் மூளும் பட்சத்தில் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேலுக்கு எதிராக எல்லையோ விதிகளோ இல்லாமல் போர் தொடுப்பார்கள்  என்றும் அவர் எச்சரித்தார்.

தரை வழியாக மட்டுமல்ல, வான் மற்றும் கடல் வழியாகவும் இஸ்ரேலை தாக்குவோம் என்று ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லா எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், சைப்ரஸ் நாடு இஸ்ரேலுக்கு தளம் கொடுத்தால் நாங்களும் சைப்ரஸ் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கடுமையான தொனியில் எச்சரித்தார்.


 



Post a Comment

Previous Post Next Post