அண்மையில் காலஞ்சென்ற கவியரசி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அவர்கள் 'வேட்டை'க்கு வழங்கிச் சென்றுள்ள சில நல்ல கருத்துக்கள்:
- ஒவ்வொரு நபரையும் இறைவன் ஒரு நோக்கத்திற்காகத்தான் படைத்தான். எனவே அந்த நோக்கத்தை நாம் உணர்ந்து எம்மை நாம் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகப் பாடுபட்டு உழைக்கவும் வேண்டும்.
- முயற்சி செய்யாமல் கிடைப்பது அதிஷ்டம்; முயற்சியின் விளைவாக கிடைப்பது வெற்றி! அதிஷ்டத்தில் ஆசை வைக்காமல் வெற்றிமீது ஆசை வைக்க வேண்டும்; அதற்காகக் கிடைக்கும் சந்தரப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வாழ்க்கையில் யாரும் யாருடைய நிம்மதியையோ, சந்தோஷத்தையோ சீர்குலைக்க முயலக்கூடாது. எவரொருவர் மற்றவர் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைக்க முயன்றாலும் அதற்கான தண்டனை இறைவனிடம் இருந்து அவருக்கு வந்துசேரும். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவற்றையே விரும்பினால் நமக்கும் எப்போதும் நல்லதே நடக்கும்.
- மற்றவரைத் தாழ்த்தியோ தாக்கியோ பேசக் கூடாது. அவ்வாறு ஒருவர் நடந்து கொண்டால். யாரை அவர் தாக்கி, தாழ்த்தி, வீழ்த்திப் பேசினாரோ அவரிடமே தாழ்ந்து வீழ்ந்து கிடக்க வேண்டி ஏற்படும்.
காலஞ்சென்ற இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாதிப்பானாக!
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
அஞ்சலி