திருக்-குர்ஆன் தமிழாக்கம் -1

திருக்-குர்ஆன் தமிழாக்கம் -1


அத்தியாயம்-1
அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

1:1.அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:2.(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

1:3.(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:4.(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5.நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

1:6.(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1:7.(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
(தொடரும்)

SOURCE:eraivanainokki



 


Post a Comment

Previous Post Next Post