தமிழர்களின் மருத்துவத்துறையில் மாபியா! அர்ச்சுனா ஆதார அஸ்திரத்தால் பூதாகரம்!

தமிழர்களின் மருத்துவத்துறையில் மாபியா! அர்ச்சுனா ஆதார அஸ்திரத்தால் பூதாகரம்!


தமிழ் மக்களுக்கு மருத்துவ சேவை கிட்ட வேண்டிய ஒரு மையத்தை உள்ளடக்கிய மாபியா வெளிப்படுத்தல்களும் அது சார்ந்த ஏட்டிக்கு போட்டி அதிர்வுகளும் தொடர்ந்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகராக பொறுப்பேற்ற வைத்தியர் அர்ச்சுனா அந்த வைத்தியசாலையில் செய்த சில நகர்வுகள் இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளன.

குறிப்பாக மூடப்பட்டு இருந்த வைத்தியசாலையின் சில பிரிவுகளை வைத்தியர் அர்ச்சுனா இயங்க வைத்ததும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவின் நகர்வுகளால் எரிச்சலடைந்த சில மருத்துவர்கள் அவருக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் அர்ச்சுனாவின் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவி இன்று (8) மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. 

இதனால் தான் வைத்தியர் அர்ச்சுனாவை பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்வதற்காக நகர்வுகள் வெளிப்பட பொது மக்களால் அந்த நகர்வுகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post