256. வினா:இரு வேறு உலகத்து இயற்கை எவை?
விடை:1. செல்வம் உடையவராதல் ,2. அறிவுடைய வராதல்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.(374)
257. வினா: மிக்க வலிமையுடையது எது?
விடை:ஊழ் (விதி)
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.(380)
258. வினா:அரசருள் ஏறு போன்றவன் யார்?
விடை: படை, குடிமக்கள், உணவு வளம், அமைச்சர், நட்பு, காவல் இவை பெற்ற அரசன்
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.(381)
259. வினா :சிறந்த அரசு என்பது எது?
விடை: பொருளீட்டி சேர்த்து, காத்து, பகுத்துச் செலவிடுவதே சிறந்த அரசு இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தாக,(385)
260. வினா மக்களிடம் தெய்வமாகப் போற்றப்படுபவர் யார்?
விடை: நீதி தவறாமல் காத்திடும் ஆட்சியாளன்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.(388)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்