திறந்திடும் விழிகளை
விரல்கள் தடுத்திடும்
மை தீட்டிய விழியோ
பொய்யுரைத்திடும்
கண்ணில் காணும்
காதல் மொழியெடுத்து
உன்னில் நானுறைய
என்னில் கதையெழுது
நம் மௌனங்களில்
எத்தனையோ தேடல்
நித்தமும் பார்வையிலே
அத்தனையும் கூடல்
முறைத்த பார்வை
விறைத்து போய்
கூர்மைக் கண்கள்
காதலோடு நாணும்
நாணத்தை மெதுவாக
நகர்த்தி விட்டு
இமைகளின் அசைவோடு
நளினமாய்க் கூறும்
உருண்டிடும் விழிக்குள்
ஒளிந்திருக்கும் காதலோடு
புருவங்கள் உயர்த்தி
இதயத்தினுள் சேரும்
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை